சென்னை கோபாலபுரம் இல்லத்தில் திமுக தலைவர் மு.கருணாநிதியை, பிரதமர் நரேந்திர மோதி இன்று (06-11-2017) நேரில் சந்தித்து அவருடைய உடல்நலம் குறித்து விசாரித்தார்.
கோபாலபுரம் வந்த பிரதமர் நரேந்திர மோதியை, மு.க.ஸ்டாலின், கனிமொழி, துரைமுருகன் ஆகியோர் வரவேற்றனர்.
அப்போது, குறளோவியம் (ஆங்கிலப் பதிப்பு) மற்றும் முரசொலி பவள விழா மலர் ஆகிய புத்தகங்களை, பிரதமர் நரேந்திர மோதிக்கு, திமுக தலைவர் மு.கருணாநிதிப் பரிசாக வழங்கினார்.
-ஆர்.மார்ஷல்.
