காற்று மாசுபாட்டை எதிர்கொள்ள தேசிய தலைநகர் பகுதி மாநிலங்களின் ஒருங்கிணைந்த முயற்சிகளை மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஆய்வு செய்தார்.

காற்று மாசுபாட்டை எதிர்கொள்வது குறித்து தேசிய தலைநகர் பகுதி மாநிலங்கள் சமர்ப்பித்த விரிவானத் திட்டங்களை மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றத் துறை அமைச்சர் திரு பூபேந்திர யாதவ் இன்று ஆய்வு செய்தார். தேசிய தலைநகர் பகுதியில் உள்ள நகராட்சி அமைப்புகளின் தனிப்பட்ட காற்றுத் தர மேலாண்மை திட்டங்கள், நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை அடைய மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் ஆகியவற்றை ஆய்வு செய்ய கடந்த ஓர் ஆண்டில் 25-க்கும் மேற்பட்ட கூட்டங்களை அமைச்சர் நடத்தியுள்ளார்.

Leave a Reply