தொகுதி மறு வரையறை (Delimitation) மசோதா மற்றும் மத்திய அரசின் நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க, முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் தலைமையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் ஆகஸ்ட் 8, 2026 சனிக்கிழமை பிற்பகல் 3:00 மணிக்கு சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கத்தில் நடைபெற இருக்கிறது. இது சம்பந்தமாக அனைத்துக் கட்சி மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவருக்கும் தனித்தனியாக தமிழ்நாடு அரசின் சார்பில் எழுத்துப்பூர்வமானக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எனவே, தமிழ்நாட்டின் நலனில் அக்கறையுள்ள உறுப்பினர்கள் யார்? யார்? என்பது நாளை (ஆகஸ்டு 8, 2026 ) மாலை தெரிய வரும்.
–Dr.துரைபெஞ்சமின், BAMS.,M.A.,SOCIOLOGY, Ex. Honorary A.W.Officer, Govt Of India, Editor & Publisher, www.ullatchithagaval.com. Director, UTL MEDIA TEAM. editorutlmedia@gmail.com
