சட்டரீதியான அனுமதி முன்னெடுப்புகளை எடுத்து வருகிறோம், அனுமதி கிடைத்தவுடன் நிச்சயமாக நேரில் சந்திப்போம்! கரூரில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு த.வெ.க. தலைவர் விஜய் தகவல்.

கரூரில் ஏற்பட்ட தாங்க முடியாத வேதனையான நிகழ்வில் நம் குடும்ப உறவுகளை இழந்து தவிக்கிறோம். இந்தச் சூழலில் உங்களுக்கு ஆறுதலாகவும் ஆதரவாகவும் எல்லா வகையிலும் இருப்போம் என்பதை மீண்டும் உறுதிபடத் தெரிவித்துக்கொள்கிறோம்.

அதன்படி இன்று 39 பேரின் குடும்பத்தினருக்கு வங்கிக்கணக்கில் 20 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களுக்கு அறிவிக்கப்பட்ட 2 லட்சம் விரைவில் வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. அத்துடன் விஜய் சார்பாக வழங்கப்பட்ட கடிதத்தில் விரைவில் அவர் கரூர் வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

கடிதத்தில் விஜய் கூறியிருப்பதாவது, “கரூரில் ஏற்பட்ட தாங்க முடியாத வேதனையான நிகழ்வில் நம் குடும்ப உறவுகளை இழந்து தவிக்கிறோம். இந்தச் சூழலில் உங்களுக்கு ஆறுதலாகவும் ஆதரவாகவும் எல்லா வகையிலும் இருப்போம் என்பதை மீண்டும் உறுதிபடத் தெரிவித்துக்கொள்கிறோம்.

Leave a Reply