குடியரசுத் தலைவர் மே 4 முதல் 8 வரை இமாச்சலப் பிரதேசத்துக்குப் பயணம்.

குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு 202, மே 4 முதல் 8 வரை இமாச்சலப் பிரதேசத்திற்கு பயணம் மேற்கொள்கிறார். தமது பயணத்தின்போது, சிம்லாவில் உள்ள மஷோப்ராவில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் அவர் தங்குவார்.

மே 6-ம் தேதி தர்மசாலாவில் இமாச்சலப் பிரதேச மத்திய பல்கலைக்கழகத்தின் 7-வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் கலந்து கொள்கிறார்.

மே 7 அன்று, சிம்லாவில் உள்ள கெயிட்டி பாரம்பரிய கலாச்சார வளாகத்தில் நடைபெறும் கலாச்சார நிகழ்ச்சியில், குடியரசுத் தலைவர் பங்கேற்கிறார்.  பின்னர், சிம்லாவில் உள்ள ஆளுநர் மாளிகையில் இமாச்சலப் பிரதேச ஆளுநர் அளிக்கும் இரவு விருந்தில் அவர் பங்கேற்கிறார்.

திவாஹர்

Leave a Reply