அருள்நிதி திருமண வரவேற்பில், மு.க. அழகிரி!

T.ARULNITHI MARRIGE T.ARULNITHI MARRIGE.jpg2 T.ARULNITHI MARRIGE.jpg3

தி.மு.க. தலைவர் மு.கருணாநிதியின் பேரனும், தமிழரசுவின் மகனுமான நடிகர் அருள்நிதிக்கும், நீதிபதி என். கண்ணதாசன் – எஸ்.கே.கீதா தம்பதியரின் மகள் கீர்த்தனாவுக்கும், திருமண வரவேற்பு நிகழ்ச்சி, நேற்று மாலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்றது. இதில், மு.கருணாநிதியின் மகன் மு.க. அழகிரி கலந்துக் கொண்டார்.

இந்த வரவேற்பு விழாவுக்கு, தமிழக ஆளுநர் ரோசய்யா, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் திரை பிரபலங்கள், தொழில் அதிபர்கள், கட்சி பிரமுகர்கள்  பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இன்று நடந்த பேரன் திருமண விழாவில், தமிழகத்தில் சுயமரியாதை திருமணங்கள் தொடர்ந்து நடக்க வேண்டும் என்று, தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி வாய்கிழிய பேசியுள்ளார்.

பேரன் திருமண விழாவில் கலந்து கொள்ளும்படி, முக்கிய பிரமுகர்களுக்கு, மு.கருணாநிதி தனிப்பட்ட முறையில் அழைப்பிதழ் அனுப்பியுள்ளார். அதில் மு.கருணாநிதி என்று கையெழுத்தும் போட்டுள்ளார். அதில் மணமகளின் தாத்தாவை குறிப்பிடும் போது,  நல்லப்பரெட்டியார் என்று சாதிப் பெயரை அழைப்பிதழில் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய பிரமுகர்களுக்கு, மு.கருணாநிதி அனுப்பிய அழைப்பிதழ்.

முக்கிய பிரமுகர்களுக்கு, மு.கருணாநிதி அனுப்பிய அழைப்பிதழ்.

இதுதான் சாதி, மத, பேதமற்ற சமத்துவ கொள்கையா? இதுக்கு பெயர்தான் சுய மரியாதையா?

மற்றவர்களை பார்த்து சாதி வெறியர்கள், மதவெறியர்கள் என்று சொல்வதற்கு, மு.கருணாநிதிக்கு என்ன அருகதை இருக்கிறது? 

ஊருக்குதான் உபதேசம்! தமக்கு கிடையாது என்பதைதன் வாழ்நாள் கொள்கையாக,  தி.மு.. தலைவர் மு.கருணாநிதி  கடைப்பிடித்து வருகிறார் போலும்.

-டாக்டர் துரைபெஞ்சமின்.

 drduraibenjamin@yahoo.in