ஆர்.கே. நகர் சட்டமன்ற தொகுதிக்கு ஜூன் 27-ல் இடைத்தேர்தல்: இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

logoCEO

தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படும், ஆர்.கே. நகர் சட்டமன்ற தொகுதி உள்பட, மேகாலயாவின் சோக்போட், கேரளாவின் அருவிக்கரா, திரிபுராவின் பிரதாப்கர், கர்மா, மத்திய பிரேசத்தின் கரோத் ஆகிய தொகுதிகளுக்கும் ஜூன் 27-ல் இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

PN35_260520151 copy PN35_260520152 copy PN35_260520153 copy

ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. வெற்றிவேல்,  கடந்த 17-ஆம் தேதி ராஜினாமா செய்தார்.

முதலமைச்சராக பதவியேற்கும் ஒருவர் 6 மாத காலத்திற்குள் சட்டமன்ற உறுப்பினராக ஆக வேண்டும் என்பதால், தற்போது காலியாக உள்ள ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதியில் ஜெ.ஜெயலலிதா போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில், வரும் ஜூன் 27-ஆம் தேதி ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மனுத்தாக்கல்  ஜூன் 3-ஆம் தேதி தொடங்குகிறது. மனுத்தாக்கல் செய்ய ஜூன் 10-ஆம் தேதி கடைசி நாளாகும். மனுக்கள் மீதான பரிசீலனை ஜூன் 11-ஆம் தேதி நடக்கிறது. மனுக்களை திரும்பப் பெற ஜூன் 13-ஆம் தேதி கடைசி நாளாகும்.

இந்த இடைத்தேர்தலின் வாக்குகள் ஜூன் 30-ஆம் தேதி எண்ணப்பட்டு அன்று மாலையே அறிவிக்கப்படும்.

ஜூன் 27-ல் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து, ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.

-டாக்டர் துரைபெஞ்சமின்.

drduraibenjamin@yahoo.in