காம்பத் வளைகுடாவில் மீன்பிடி படகில் இருந்த படுகாயமடைந்த ஊழியரை இந்திய கடலோர காவல்படை மீட்டது .

காம்பத் வளைகுடா கடற்கரையிலிருந்து 50 கி.மீ தொலைவில் இந்திய மீன்பிடி படகில் படுகாயத்துடன் இருந்த 37 வயதுடைய புஷ்கர்ராஜ் என்பவரை 2024 ஏப்ரல் 3 அன்று பிப்பாவில் உள்ள இந்தியக் கடலோரக் காவல்படைப் பிரிவு சி-409 படகு மூலம் மீட்டது.

அந்த மீனவருக்கு இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு, கணுக்கால் உடைந்ததையடுத்து, இந்திய கடலோர காவல்படையின் மருத்துவக் குழுக்களால் ஆரம்ப சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அந்த மீனவர் மாற்றப்பட்டார்.

எம்.பிரபாகரன்

Leave a Reply