இந்தியா-அமெரிக்கா நீர்-நிலப்பயிற்சி நிறைவு விழா .

இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான இருதரப்பு முப்படை மனிதாபிமான உதவி மற்றும் பேரழிவு நிவாரண நீர்-நிலப் பயிற்சியான டைகர் ட்ரையம்ப் 2024 இன் நிறைவு விழா 30 மார்ச் 2024 அன்று  யுஎஸ்எஸ் சோமர்செட் கப்பலில் நடைபெற்றது. இந்தப் பயிற்சி இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான உத்திபூர்வ கூட்டாண்மையை குறிக்கிறது. பன்னாட்டு  மனிதாபிமான உதவி மற்றும் பேரழிவு நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்வதில் சிறந்த நடைமுறைகள் மற்றும் நிலையான செயல்பாட்டு நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்வதை இது நோக்கமாகக் கொண்டது.

துறைமுக கட்டம் விசாகப்பட்டினத்தில் மார்ச் 18 முதல் 25 வரை நடத்தப்பட்டது. இதில் பயணத்திற்கு முந்தைய கலந்துரையாடல்கள், பாடப்பொருள் நிபுணர் பரிமாற்றம், விளையாட்டு ஈடுபாடுகள், கப்பல் போர்டிங் பயிற்சிகள், குறுக்கு தள வருகைகள் ஆகியவை அடங்கும். இந்தியாவின் துடிப்பான மற்றும் தெளிவான கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் கலாச்சார பரிமாற்றத் திட்டத்தின் ஒரு பகுதியாக மார்ச் 25  அன்று இரு கடற்படைகளின் வீரர்களும் ஹோலி பண்டிகையை ஒன்றாகக் கொண்டாடினர். 24 முதல் 30-ந் தேதி வரை கடல் கட்டம் நடத்தப்பட்டது. இதில் இரு நாடுகளின் பிரிவுகளும் கடலில் கடல்சார் பயிற்சிகளை மேற்கொண்டன. அதைத் தொடர்ந்து கூட்டு கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்கான கூட்டு நிவாரணம் மற்றும் மருத்துவ முகாம் அமைப்பதற்காக காக்கிநாடாவில் துருப்புக்கள் தரையிறக்கப்பட்டன. காக்கிநாடா மற்றும் விசாகப்பட்டினம் அருகே இந்திய கடற்படை மற்றும் அமெரிக்க கடற்படையின் கப்பல்களுக்கு இடையே யுஎச் 3 எச், சிஎச் 53 மற்றும் எம்எச் 60 ஆர் ஹெலிகாப்டர்களை உள்ளடக்கிய கிராஸ் டெக் ஹெலிகாப்டர் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.

இந்திய கடற்படையின் பங்கேற்ற பிரிவுகளில் ஒரு தரையிறங்கும் தளம், தரையிறங்கும் கப்பல் டாங்கிகள் (பெரியது) அவற்றின் ஒருங்கிணைந்த தரையிறங்கும் கலங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள், வழிகாட்டப்பட்ட ஏவுகணை போர்க்கப்பல் மற்றும் நீண்ட தூர கடல்சார் உளவு விமானம் ஆகியவை அடங்கும். இந்திய ராணுவத்தை இயந்திரமயமாக்கப்பட்ட படைகள் உட்பட ஒரு காலாட்படை பட்டாலியன் குழுவும், இந்திய விமானப்படை ஒரு நடுத்தர லிப்ட் விமானம், போக்குவரத்து ஹெலிகாப்டர் மற்றும் விரைவு அதிரடி மருத்துவக் குழு (ஆர்ஏஎம்டி) ஆகியவற்றை நிறுத்தியது.

அமெரிக்க அதிரடிப்படை, அதன் ஒருங்கிணைந்த தரையிறங்கும் படகு விமான குஷன்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள், ஒரு நாசகாரி கப்பல், கடல்சார் உளவு மற்றும் நடுத்தர லிப்ட் விமானங்கள் மற்றும் அமெரிக்க மரைன்கள் உட்பட ஒரு அமெரிக்க கடற்படை தரையிறங்கும் தளக் கப்பல்துறையை உள்ளடக்கியது.

இந்தப் பயிற்சியில் முப்படைகளைச் சேர்ந்த சிறப்பு அதிரடிப்படையினரும் பங்கேற்று, விசாகப்பட்டினம் மற்றும் காக்கிநாடாவில் உள்ள அமெரிக்க விமானங்களுடன் கூட்டாக துறைமுகம் மற்றும் கடல் கட்டத்தில் கூட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

திவாஹர்

Leave a Reply