மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோவிற்கு தீப்பெட்டி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோவிற்கு தீப்பெட்டி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளது.

திருச்சி மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் மதிமுக வேட்பாளர் துரை வைகோவிற்கு தீப்பெட்டி சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்ற திருச்சி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.

கே‌.பி.சுகுமார்

Leave a Reply