மீண்டும் பா.ஜ.க.வில் இணைந்தார் தமிழிசை சவுந்தரராஜன்!

தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பதவிகளை ராஜினாமா செய்த தமிழிசை சௌந்தரராஜன், மீண்டும் முழுநேர அரசியலுக்குத் திரும்பியிருக்கிறார்.

இன்று தமிழ்நாடு பா.ஜ.க தலைமை அலுவலகத்துக்குச் சென்ற தமிழிசை சௌந்தரராஜனை பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் வரவேற்றனர்.

பின்னர் கட்சியில் இணைவதற்கான உறுப்பினர் படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்து, உறுப்பினர் அட்டையைப் பெற்றுக்கொண்டார்.

கே.பி.சுகுமார்

Leave a Reply