நியூஸ் 7 தொலைக்காட்சியின் பத்திரிகையாளர் தாக்கப்பட்டது மிகவும் கண்டிக்கத்தக்கது !- தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்‌ அறிக்கை.

ஜி.கே.வாசன்.

நியூஸ் 7 தமிழின் பல்லடம் செய்தியாளர் நேசபிரபு தாக்கப்பட்ட சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கது.இந்த பத்திரிகையாளர் செய்திகளை சேகரிப்பதிலும், வெளியிடுவதிலும் துணிச்சல் மிக்கவராக செயல்படுபவர்.தாக்கப்பட்ட பத்திரிகையாளருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு உயர்தர தீவிர சிகிச்சை அளித்து விரைவில் குணமடைய தொடர் நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும்.

தாக்கியவர்களை விரைவில் கண்டுபிடித்து அந்தக் கொடியவர்களுக்கு சட்டத்திற்கு உட்பட்டு அதிகபட்ச தண்டனை கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இனிமேலும் தமிழகத்தில் இது போன்ற ஒரு கொலை வெறி தாக்குதல் நடைபெறாமல் இருக்க தமிழக அரசு பாதுகாப்பு அம்சங்களை, கண்காணிப்பை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.

மேலும் தமிழக அரசு பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அனைத்து சட்டதிட்டங்களையும் பயன்படுத்த வேண்டும்.நியூஸ் 7 தொலைக்காட்சியின் பத்திரிகையாளர் தாக்கப்பட்ட சம்பவம் சம்பந்தமாக பத்திரிகையாளர் மன்றம் கோரிக்கைகளையும் தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.

விடுத்திருக்கின்றதாக்கப்பட்டுள்ள நியூஸ் 7 தொலைக்காட்சியின் பத்திரிகையாளர் விரைவில் குணமடைந்து மீண்டும் பத்திரிகைத்துறையில் தனது சிறப்பான பணியை தொடர தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் வாழ்த்துகிறேன்.

இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கே.பி.சுகுமார்

Leave a Reply