தற்சார்பு இந்தியாவின் புதிய அடையாளத்தின் தன்னம்பிக்கை காரணமாக கடந்த 9 ஆண்டுகளில் மாற்றத்தின் அலை ஏற்பட்டுள்ளது: பிரதமர் நரேந்திர மோதி.

கடந்த 9 ஆண்டுகளில் காணப்பட்ட மாற்றத்தின் அலை, வளர்ச்சி என்ற வரையறையுடன் மட்டும் அல்ல என்றும் அது தற்சார்பு இந்தியாவின் தன்னம்பிக்கையின் புதிய அடையாளம் என்றும் பிரதமர் திரு  நரேந்திர மோடி கூறியுள்ளார்.

மத்திய அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா  சமூக ஊடக  எக்ஸ்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவைப் பகிர்ந்து அதற்கு பதிலளிக்கும் வகையில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: 

“மத்திய அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா, கடந்த 9 ஆண்டுகளில் சிறந்த மாற்றத்தின் அலையை இந்தியா கண்டுள்ளது என்று கூறியுள்ளார். இது வளர்ச்சி என்பதுடன் மட்டுமே வரையறுக்கப்பட முடியாது என்று அவர் எழுதியுள்ளார். தற்சார்பு இந்தியாவின் தன்னம்பிக்கையின் புதிய அடையாளம் இது. அதன் எதிரொலி இன்று உலகம் முழுவதும் கேட்கிறது.”

எஸ் சதிஷ் சர்மா

Leave a Reply