திருச்சி காவிரி பாலத்தில் வேன் கவிழ்ந்தது!

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை காவிரி பாலத்தில் இன்று (17.11.2023) காலை 8:35 மணியளவில் அதிவேகமாக வந்த மினி லோடு வேன் ஒன்று ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து காவிரி பாலத்தின் மத்திய பகுதியில் கவிழ்ந்தது.

இதனால் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பள்ளி  கல்லூரி செல்லும் மாணவர்கள் மற்றும் பணிக்கு செல்லும் நபர்கள் சிரமத்திற்கு உள்ளானார்கள் .

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து போலீசார் கவிழ்ந்து கிடந்த வேனை கனரக வாகனத்தின் (கிரேன்) உதவியுடன் அங்கிருந்து அப்புறப்படுத்திப் போக்குவரத்தை சீர்படுத்தினர். வேன் கவிழ்ந்ததற்கான உண்மையான காரணம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Dr.துரைபெஞ்சமின், BAMS.,
M.A.,SOCIOLOGY,
Ex. Honorary A.W.Officer, Govt Of India,
Editor & Publisher,
www.ullatchithagaval.com
Director, UTL MEDIA OPC PVT LTD,
Mobile No.98424 14040

Leave a Reply