மகளிர் உரிமைத் தொகை இன்று (10.11.2023) மாலைக்குள் பயனாளிகளுக்கு வந்து சேர்ந்து விடும்!-முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதி.

மாதந்தோறும் 15ஆம் தேதி வழங்கப்படும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த மாதம் மட்டும் நவம்பர் 10ஆம் தேதி பயனாளிகளின் வங்கி கணக்கில் செலுத்துவதற்கு உத்தரவிடக்கோரி, நமது UTL MEDIA இயக்குனரும், உள்ளாட்சித்தகவல் ஊடகத்தின் ஆசிரியரும், வெளியிட்டாளரும், மூத்த பத்திரிகையாளருமான   டாக்டர் துரை பெஞ்சமின் அவர்கள், தமிழ்நாடு முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் அவர்களுக்கு, கடந்த 06 11.2023 ன்று விரிவான கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அந்த கடிதத்தின் உண்மை நகல், நமது வாசகர்களின் பார்வைக்காக, நமது ஆசிரியரின் அனுமதியோடு இங்கு பதிவு  செய்துள்ளோம்.

LR-TO-TN-CM-MK-STALIN

மூத்த பத்திரிக்கையாளர்   டாக்டர் துரை பெஞ்சமின் அவர்களின் இந்த அவசரக் கோரிக்கையை ஏற்று இந்த மாதத்திற்கான மகளிர் உரிமைத் தொகையை இன்று (10.11.2023) மாலைக்குள் பயனாளிகளின் வங்கி கணக்கில் செலுத்த, தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். தை இன்று நடைபெற்ற விழாவில் உறுதியும் செய்துள்ளார்.

அதற்காக நமது UTL MEDIA வின் சார்பில்  முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களுக்கும், தமிழக அரசுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

-கே பி சுகுமார்.BE., ullatchithagaval@gmail.com

speech-1

கே பி சுகுமார்.BE.,

ullatchithagaval@gmail.com

Leave a Reply