தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தேர்தல் பணிக்குழு கூட்டம்! -அரக்கோணத்தில் நடைப்பெற்றது.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு  அரக்கோணம் சுந்தர விநாயகர் கோவிலில் 19.09.2023 அன்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் P.K. நரேஷ் குமார் ஏற்பாட்டில் சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. தொடர்ந்து  அரக்கோணத்தில் உள்ள K.G.S ஹாலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் S. D. H.ராஜன் ஏற்பாட்டில்  காலை 10 மணியளவில் மாவட்ட தேர்தல் பணிக்குழு கூட்டம் தொடங்கியது . 

தேர்தல் பணிக்கு நியமனம் செய்யப்பட்ட மாவட்ட,ஒன்றிய உறுப்பினர்கள் தங்களது பொறுப்புகளை மாநில  தலைவர் .P. K. நரேஷ் குமார்  முன்னிலையில் ஏற்று கொண்டனர். கூட்டத்தில் மாநில தலைமை செயலாளர் அனிதா, மாநில பொருளாளர் ராஜேஸ்வரி,  மாநில துணை தலைவர் மணி, மாநில துணை தலைவர் குருசாமி, மாநில பொது செயலாளர் சகாயராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் ரவி ராஜ், மாநில இளைஞரணி பொது செயலாளர் பல்லவி, மாநில இளைஞரணி ஒருங்கிணைப்பாளர் முரளி, மாவட்ட இளைஞரணி துணை தலைவர்  பாரூக், மாவட்ட இளைஞரணி நகர செயலாளர் சத்தியா, மாவட்ட இளைஞரணி புறநகர் செயலாளர் தனபாக்கியம் ஆகியோர் பங்கேற்றனர். இறுதியாக சித்திரவேள் கூட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

-கே.பி.சுகுமார்.

Leave a Reply