தமிழக அரசு குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என வாக்குறுதி கொடுத்து விட்டு, ஆலோசனை என்ற பெயரில் ஏமாற்றத்தை அளித்திருக்கிறது!-தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கை.

தமிழக அரசு, ஆலோசனை என்ற பெயரில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குவதில் ஏமாற்றத்தை அளித்திருப்பது நியாயமில்லை.

திமுக சட்டமன்றத் தேர்தலின் போது மக்களிடம் இருந்து வாக்கு – வாங்குவதற்காக குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கொடுக்கப்படும் என்று அறிவித்தது.

இந்நிலையில் ஆட்சிக்கு வந்தவுடனேயே கொடுத்திருக்க வேண்டும். ஆட்சிக்கு வந்து இரண்டு வருடமாக எதிர்பார்த்த மக்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்காமல் காலத்தை நீடித்து வந்தது. ஆனால்

மேலும் தற்பொழுது ஆலோசனை என்ற பெயரில் ஆயிரம் ரூபாய் வழங்குவதில் பாகுபாடு, பாரபட்சம், கோட்பாடு என வகுத்து வாக்களித்த மக்களுக்கு நம்பிக்கையை இழக்க வைத்திருக்கிறது.

இந்நிலையில் தமிழக அரசு உடனடியாக தனது நிலையை, ஆலோசனை செய்ததை மாற்றிக்கொண்டு தேர்தலில் வெளியிட்ட வாக்குறுதிக்கு ஏற்க மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டும்.

எனவே தி.மு.க அரசு மகளிருக்கு ஆயிரம் ரூபாய் கொடுப்பதில் எவ்வித கட்டுப்பாடும் இல்லாத வகையில் அனைவருக்கும் கொடுப்பது தான் நியாயமானது என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கே.பி.சுகுமார்

Leave a Reply