தமிழக ஆளுநர் , செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கியது சரியானதே!- தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வரவேற்பு.

நேற்று மாண்புமிகு தமிழக ஆளுநர் திரு. ஆர்.என்.ரவி அவர்கள், திரு. செந்தில் பாலாஜி அவர்களை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி அறிவிப்பு வெளியிட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

காரணம் அவர் மீது குற்ற வழக்குகள் உள்ள நிலையில், நீதிமன்றக் காவலுக்கு உட்பட்டிருக்கும் வேளையில், அமலாக்கத்துறையின் விசாரணை நடைபெறும் சூழலில் உண்மை வெளிவர வேண்டுமென்றால் ஆளுநரின் முடிவு சரியானதே.

குறிப்பாக மாநிலத்தின் முதல் குடிமகன் ஆளுநர் என்ற முறையில் அவர் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்திருப்பார்.

எனவே ஜனநாயகத்தில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்பட, நீதி நியாயம் நிலைநாட்டப்பட, மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் தமிழக ஆளுநர் அவர்களின் முடிவு அமைந்திருப்பதாக தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

எஸ்.திவ்யா

Leave a Reply