தமிழக உளவுத்துறையில் (Intelligence-நுண்ணறிவு) அதிரடி மாற்றம்!

டேவிட்சன் தேவாசிர்வாதம். IPS

செந்தில்வேலன் IPS

தமிழக உளவுத்துறை (Intelligence-நுண்ணறிவு) Additional Director General of Police -(ஏடிஜிபி)-யாக இருந்த டேவிட்சன் தேவாசிர்வாதம், காவல்துறை தலைமையிட அலுவலகத்தின் ஏ.டி.ஜி.பி.-யாக அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார்.

ஆவடி மாநகர காவல் ஆணையராக இருந்த அருண் ஐபிஎஸ், தற்போது சென்னையில் சட்ட-ஒழுங்கு “ஏடிஜிபி”-யாக நியமிக்கப்பட்டுள்ளார். அந்த பதவியை வகித்து வந்த சங்கர் தற்போது, ஆவடி மாநகர காவல் ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

உளவுத்துறை (Intelligence-நுண்ணறிவு) Inspector General of Police (ஐ.ஜி)- யாக உள்ள செந்தில்வேலன், டேவிட்சன் தேவாசிர்வாதம் வகித்து வந்த உளவுத்துறை (Intelligence-நுண்ணறிவு) ஏ.டி.ஜி.பி பொறுப்பையும் கூடுதலாக கவனித்து வருவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான அறிவிப்பை தமிழக உள்துறை முதன்மைச் செயலாளர் P.அமுதா வெளியிட்டுள்ளார்.

-Dr.துரைபெஞ்சமின், BAMS.,
M.A.,SOCIOLOGY,
Ex. Honorary A.W.Officer, Govt Of India,
Editor & Publisher,
www.ullatchithagaval.com
Director, UTL MEDIA OPC PVT LTD,
Mobile No.98424 14040

Leave a Reply