அதிரடி காட்டிய அமலாக்கத்துறை!-அழுது புரண்ட அமைச்சர்!-பதறி துடித்து மருத்துவமனைக்கு சென்ற முதலமைச்சர்!-அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உடனே பைபாஸ் சர்ஜரி செய்ய வேண்டும்! -ஓமந்தூரர் அரசு மருத்துவமனை இயக்குனர் அறிக்கை.

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆறுதல் சொல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

அமைச்சர் செந்தில் பாலாஜியின் இல்லத்தில் இருந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை விசாரணைக்காக அழைத்து சென்றனர். அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட செந்தில் பாலாஜிக்கு, திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனே அவர் சென்னை ஓமந்தூரர் அரசினர் தோட்டம் தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இந்நிலையில், ஓமந்தூரர் அரசினர் தோட்டம் தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆஞ்சியோ பரிசோதனை நிறைவடைந்ததையடுத்து, அவருக்கு இதயத்தின் மூன்று முக்கிய ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்ப்பட்டுள்ளதால் உடனே பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என ஓமந்தூரர் அரசினர் தோட்டம் தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை இயக்குனர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அமைச்சர் செந்தில் பாலாஜியை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.

Dr.துரைபெஞ்சமின், BAMS.,
M.A.,SOCIOLOGY,
Ex. Honorary A.W.Officer, Govt Of India,
Editor & Publisher,
www.ullatchithagaval.com
Director, UTL MEDIA OPC PVT LTD,
Mobile No.98424 14040

Leave a Reply