மூன்றாவது எரிசக்தி மாற்ற பணிக்குழு கூட்டம் மும்பையில் 2023 மே 15 முதல் 17 வரை நடைபெறவுள்ளது.

இந்தியாவின் ஜி20  தலைமைத்துவத்தின் கீழ் மூன்றாவது எரிசக்தி மாற்ற பணிக்குழு கூட்டம் மும்பையில் 2023 மே 15 முதல் 17 வரை நடைபெறவுள்ளது. மூன்று நாட்கள் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் ஜி20 நாடுகளின் உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர் நாடுகளின் உறுப்பினர்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளான சர்வதேச எரிசக்தி முகமை, உலக வங்கி, இந்திய உலக எரிசக்தி குழுமம் ஆகியவற்றின் உறுப்பினர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, முன்னுரிமை பகுதிகள் குறித்து விவாதிக்கவுள்ளனர்.

கூட்டத்தின் முதல் நாளில் ரயில்வே, நிலக்கரி மற்றும் சுரங்கள்கள் துறை இணை அமைச்சர் திரு ராவ் சாஹேப் தன்வே சிறப்புரை ஆற்றவுள்ளார்.

திவாஹர்

Leave a Reply