மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி மகளிர் நல சேமிப்பு கணக்கை தொடங்கினார்.

மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை, சிறுபான்மையின நலத்துறை அமைச்சர் திருமதி ஸ்மிருதி இரானி இன்று பிற்பகல்  சன்சத் மார்க்  தலைமை அஞ்சல் அலுவலகம்  சென்று மகளிர் நல சேமிப்புக் கணக்கை தொடங்கினார். அவருக்கான கணக்கு தொடங்கப்பட்டு, கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்ட பதிவுப் புத்தகம் அவரிடம் வழங்கப்பட்டது.

அப்போது அஞ்சல் அலுவலக ஊழியர்கள், மகளிர் நல சேமிப்பு கணக்கு வைத்திருப்போர் மற்றும்  செல்வமகள் சேமிப்பு திட்ட கணக்குதாரர்கள் ஆகியோரிடம் அவர் உரையாற்றினார்.

சிறுமிகள் உட்பட மகளிருக்கு அதிகாரமளிக்கும் வகையில்,  விடுதலை அமிர்தப் பெருவிழாவின் நினைவாக 2023-24-ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் மகளிர் நல சேமிப்புத் திட்டத்தை நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

திவாஹர்

Leave a Reply