பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு கொவிட்-19 தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு கொவிட்-19 தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் இன்று புதுதில்லியில் நடைபெறும் விமானப்படைத் தளபதிகளின் மாநாட்டில் கலந்துகொள்ள இருந்தார். ஆனால் வைரஸ் தொற்று உறுதி செய்யப்படவே அவர், இம்மாநாட்டில் கலந்துகொள்ளவில்லை.

லேசான அறிகுறிகளுடன் அவரது இல்லத்தில் தனிமைப்படுத்திக்  கொண்டுள்ளார். மருத்துவர் குழு அவரது உடல்நிலையைப் பரிசோதித்து, ஓய்வெடுக்க அறிவுறுத்தியுள்ளது.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply