அருணாச்சலப் பிரதேசத்தின் க்யாங்கரில் ஷார் நய்மா ட்ஷோ சம் நம்யிக் லகாங் (கோன்பா) புத்த ஆலயம் திறக்கப்பட்டதற்கு பிரதமர் நரேந்திர மோதி பாராட்டு தெரிவித்துள்ளார்.

அருணாச்சலப் பிரதேசத்தின் க்யாங்கரில் ஷார் நய்மா ட்ஷோ சம் நம்யிக் லகாங் (கோன்பா) என்ற புத்த ஆலயத்தை அம்மாநில முதலமைச்சர் திரு பேமா கண்டு திறந்து வைத்ததற்கு பிரதமர் நரேந்திர மோதி பாராட்டு தெரிவித்துள்ளார்.

அருணாச்சலப் பிரதேச முதல்வர் திரு பேமா கண்டுவின் ட்விட்டர் பதிவைப் பகிர்ந்து பிரதமர் கூறியதாவது:

“இந்த புனிதத் தலம், இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் வசிக்கும் மக்களை ஈர்த்து, புத்த மதத்துடன் வேரூன்றிய நம் தேசத்தின் ஆழமான தொடர்பை மேலும் வலுப்படுத்தட்டும்.”

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply