ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்ட மசோதாவிற்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் அளித்ததற்கு தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் நன்றி!

ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்ட மசோதாவிற்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் அளித்தற்கு தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் நன்றி.
தமிழ் மாநில காங்கிரஸ் உள்பட தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் இந்த மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்க வேண்டுமென்று கடந்த பல மாதங்களாக கோரிக்கைவிடுத்து வருகிறது.

ஆனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கும் மாநில அரசிற்கும், மத்திய அரசால் நியமிக்கப்பட்டிருக்கும் மாநில ஆளுநருக்கும் ஒத்தக் கருத்து ஏற்படவில்லை. இதனால் மக்களுக்கு எந்த தெளிவும் ஏற்படவில்லை.

இதற்கிடையில் பல மாதங்களாக ஆன்லைன் சூதாட்டத்தால் பலர் பணங்களையும், உயிர்களையும் இழந்துள்ளனர். தமிழக ஆளுநர் மற்றும் மாநில அரசின் செயல்பாடுகளை மக்கள் கூர்ந்து கவனித்து வருகின்றனர்.

இதுபோன்ற முக்கிய பிரச்சனைகளில் மக்களுக்கு சாதகமான முடிவுகள் உடனுக்குடன் வந்திருக்க வேண்டும். தாமதமென்றாலும் தற்பொழுது ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்ட மசோதாவிற்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் அளித்து இருப்பது வரவேற்கதக்கது.

இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

எஸ்.திவ்யா

Leave a Reply