மீனவர்கள் கடலில் அச்சமின்றி மீன் பிடிக்க உரிய நடவடிக்கையை சிபிசிஎல் நடவடிக்கை எடுக்க வேண்டும்!-தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கை.

ஜி.கே.வாசன்.

நாகை மாவட்ட மீனவர்கள் தற்பொழுது வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளார்கள். காரணம் கடலில் கச்சா எண்ணைய் கசிவு விவகாரம்.

கடல் மீனவர்களின் வாழ்வாதாரம். அந்த கடலில் சிபிசிஎல் நிறுவனத்தால் அமைக்கப்பட்டிருக்கும் கச்சா எண்ணைய்யை கப்பலுக்கு கொண்டு செல்லும் பைப் லைனில் உடைப்பு ஏற்பட்டு கடலில் கலந்து மிகுந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கடல்பகுதியில் துர்நாற்றமும், கண் எரிச்சலும், மூச்சுத் திணறலும் ஏற்பட்டுள்ளது. இதனால் கடலில் சென்று மீனவர்கள் மீன்பிடிக்க இயலாத சூழ்நிலை உள்ளது.

மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்காமல் தடையின்றி தொடர சிபிசிஎல் நிறுவனம் உடனடியாக ஒரு காலக்கெடுவுக்குள் இந்த எண்ணைய் கசிவு ஏற்பட்டுள்ள பகுதியை கண்டுபிடித்து உடைந்த லைனை சரிசெய்ய வேண்டும். மேலும் நவீன இயந்திரங்கள் மூலம் கடலில் கசிந்த கச்சா எண்ணைய்யை அகற்ற உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக அரசு உடனடியாக இந்த பிரச்சனையில் தனிக் கவனம் செலுத்தி மீனவர்கள் துயர் துடைத்து, அவர்களுக்கு உரிய நம்பிக்கை அளிக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கே.பி.சுகுமார்

Leave a Reply