மின்சாரம் தாக்கி உயிருக்குப் போராடிய யானையை காப்பாற்றியதற்காக பந்திப்பூர் புலிகள் காப்பக ஊழியர்களுக்கு பிரதமர் நரேந்திர மோதி பாராட்டு.

மின்சாரம் தாக்கி உயிருக்குப் போராடிய யானையைக் காப்பாற்றியதற்காக பந்திப்பூர் புலிகள் காப்பக ஊழியர்களைப் பாராட்டியுள்ள பிரதமர் திரு. நரேந்திர மோடி, நமது மக்களிடையே உள்ள இத்தகைய பரிவு பாராட்டத்தக்கது என்று கூறியுள்ளார்.

சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றம், தொழிலாளர் நலன் & வேலைவாய்ப்புத் துறை மத்திய அமைச்சர் திரு பூபேந்திர யாதவ் வெளியிட்ட ட்விட்டர் பதிவுக்கு பதிலளிக்கும் வகையில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

“இதைப் பார்ப்பதற்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

பந்திப்பூர் புலிகள் காப்பக ஊழியர்களுக்கு பாராட்டுக்கள். நம் மக்களிடையே உள்ள இத்தகைய இரக்க குணம் பாராட்டுக்குரியது”.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply