ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தேமுதிக தனித்து போட்டி!-தேமுதிக சார்பில் .S.ஆனந்த் போட்டியிடுகிறார்.

ஈரோடு கிழக்குத் தொகுதியில் தேமுதிக தனித்து போட்டியிட உள்ளதாக, அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

இந்நிலையில், ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்த தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், துணைச் செயலாளர் சுதீஸ் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

இதில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறுகையில், “ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிட உள்ளது. தேமுதிக சார்பில் ஈரோடு கிழக்கு மாவட்டச் செயலாளர் ஆனந்த் போட்டியிடுகிறார். வேட்புமனு தாக்கல் செய்யும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

கே.பி.சுகுமார்

Leave a Reply