கடல் மார்க்கமாக கடத்தப்பட்ட கேரள கஞ்சா!-மடக்கிப் பிடித்த இலங்கை கடற்படையினர்.

இலங்கை, யாழ்ப்பாணம், குரு நகர் கடற்பகுதியில் 15 டிசம்பர் 2022 அன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது 181 கிலோவுக்கும் அதிகமான எடையுள்ள கேரள கஞ்சாவை கடத்திச் சென்ற படகு ஒன்றை இலங்கை கடற்படையினர் மடக்கிப் பிடித்தனர். இது சம்மந்தமாக ஒருவர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட நபர் யாழ்ப்பாணம் பாசூர் பகுதியைச் சேர்ந்தவர் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கைது செய்யப்பட்ட நபர், பறிமுதல் செய்யப்பட்ட கேரள கஞ்சா மற்றும் படகு ஆகியவற்றை சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் போலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

–Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com

Leave a Reply