குஜராத் மாநில சட்டப் பேரவைக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது!-110 வயது மூதாட்டி தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.

2-ம் கட்ட வாக்குப்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது…!

182 உறுப்பினர்கள் கொண்ட குஜராத் சட்டசபைக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இதில் முதல் கட்டமாக 89 தொகுதிகளில் டிசம்பர் 1-ந்தேதி வாக்குப்பதிவு நடந்தது. சவுராஷ்டிரா, கட்ச் மற்றும் தெற்கு குஜராத் பிராந்தியங்களில் அடங்கியுள்ள இந்த தொகுதிகளில் 63.31 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவானது.

இந்நிலையில் மீதமுள்ள 93 தொகுதிகளில் இன்று (05/12/2022) காலை வாக்குப்பதிவு தொடங்கியது. இதில் 110 வயது மூதாட்டி தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார். அவருக்கு பூ கொத்து கொடுத்து வாக்கு சாவடி தேர்தல் அதிகாரிகள் மகிழ்ச்சியோடு வரவேற்றனர்.

–Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com

Leave a Reply