கோலாலம்பூரிலிருந்து திருச்சிக்கு விமானம் மூலம் கடத்திவரப்பட்ட 667 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

துபாய் மற்றும் மலேசியா நாடுகளில் இருந்து விமானம் மூலம் கடத்தி வரப்பட்ட ரூ. 69 லட்சம் மதிப்பிலான தங்கம் திருச்சியில் பறிமுதல் செய்யப்பட்டது. கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் திருச்சி விமான நிலையத்தில் 667 கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டதாக வெளியாகி இருக்கும் தகவல் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் நாளுக்கு நாள் தங்கம் கடத்தல் அதிகரித்துக் கொண்டு செல்கிறது. மலேசியா, சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து குருவிகள் மூலம் பல கோடி மதிப்பிலான தங்க நகைகள் இங்கு கடத்தி வரப்படுகிறது. இந்தக் கடத்தலில் கல்லூரி மாணவர்களும் தங்களை ஈடுபடுத்தி வாழ்வை தொலைத்து வருகின்றனர்.

கே.பி.சுகுமார்

Leave a Reply