இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விடுவிப்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்!- மீன்வளத் துறை இணையமைச்சர் எல் முருகன்.

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விடுவிப்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று மத்திய மீன்வளம் மற்றும் தகவல் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் எல் முருகன் தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் கடலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இவ்விவகாரத்திற்கு தீர்வு காண வெளியுறவு அமைச்சகத்திடம் கோரப்படும் என்று கூறினார்.

விவசாயிகளுக்கான கடன் அட்டை திட்ட வசதியை மீனவர்களுக்கும் வழங்குவதற்கு மத்திய அரசு ஆர்வமுடன் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

எஸ்.திவ்யா

Leave a Reply