பிரிட்டனின் புதிய மன்னராக மூன்றாவது சார்லஸ் இன்று முறைப்படி பிரகடனப்படுத்தப்பட்டார்.

பிரிட்டனின் புதிய மன்னராக மூன்றாவது சார்லஸ் இன்று முறைப்படி பிரகடனப்படுத்தப்பட்டார்.
லண்டனில் செயின்ட் ஜேம்ஸ் அரண்மனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இதற்கான உறுதிமொழியை எடுத்துக் கொண்டபின், அரசின் பிரகடனத்திலும் அவர் கையெழுத்திட்டார்.

அரசியல் தலைவர்கள், நீதிபதிகள் மற்றும் உயரதிகாரிகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.மன்னராக பொறுப்பேற்ற பின் பேசிய சார்லஸ், நாட்டு மக்களின் நலனுக்காக மிகுந்த பரிவோடும், அக்கறையோடும் வேற்றுமைகளைக் கடந்து செயல்படுவேன் என்று உறுதியளித்தார்.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply