கடலோரப்பகுதிகள் தூய்மைப்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தை மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் வலியுறுத்தியுள்ளார்.

கடலோரப்பகுதிகள் தூய்மைப்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தை மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் வலியுறுத்தியுள்ளார்.இன்று புதுச்சேரியில் கடலோர தூய்மைப்பணிகளை தொடங்கிவைத்து அவர் பேசினார்.

கடலோர தூய்மைப்பணிகளுக்கு ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.விடுதலை பெருவிழாவின் ஒரு பகுதியாக 75 நாட்கள் இந்த தூய்மைப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார்.இப்பணிகள் பிரதமர் திரு நரேந்திர மோடி பிறந்த தினமான செப்டம்பர் மாதம் 17-ஆம் தேதி நிறைவடையும் என்றும் அவர் தெரிவித்தார்.

முன்னதாக, இதுகுறித்த விழிப்புணர்வு பேரணியையும் பூபேந்தர் யாதவ் தொடங்கிவைத்தார்.

எம்.பிரபாகரன்

Leave a Reply