கோதுமை மாவு ஏற்றுமதி தொடர்பான கொள்கையில், திருத்தங்களை மேற்கொள்வதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்.

கோதுமை மாவு ஏற்றுமதி தொடர்பான கொள்கையில், திருத்தங்களை மேற்கொள்வதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.புதுதில்லியில் இன்று பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு மேற்கொள்ளப்பட்டது.இதன்படி, ஏற்றுமதி தடையிலிருந்து கோதுமை மாவுக்கு அளிக்கப்பட்ட விலக்கு ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.கோதுமை மாவு ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகளை விதிக்க இந்த திருத்தங்கள் வகை செய்யும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.கோதுமை மாவு விலையேற்றத்தை கட்டுப்படுத்துவதற்கும், உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் ஏதுவாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திவாஹர்

Leave a Reply