பராகுவே சென்றுள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் ஜெய்சங்கர், மகாத்மா காந்தியடிகளின் சிலையை திறந்து வைத்துள்ளார்.

அரசுமுறைப்பயணமாக பராகுவே சென்றுள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் ஜெய்சங்கர், Asuncion நகரில் தேசப்பிதா மகாத்மா காந்தியடிகளின் சிலையை திறந்து வைத்துள்ளார்.

இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில், இந்நகரின் நீர்நிலைகள் அழகு மிளிர காணப்படும் பகுதியில் தேசப்பிதாவின் மார்பளவு சிலையை அமைக்க நகராட்சி நிர்வாகத்தினர் முடிவு செய்தது மகிழ்ச்சி அளிப்பதாக கூறியுள்ளார்.

கோவிட் பெருந்தொற்றிலிருந்து மீள்வதற்கு பராகுவே அளித்த ஒத்துழைப்பை பாராட்டுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
200 ஆண்டுகளுக்கு முன்பு, பராகுவே நாட்டில் சுதந்திரப் போராட்டம் தொடங்கிய வரலாற்று சிறப்பு மிக்க casa de la independencia பகுதியையும் ஜெய்சங்கர் பார்வையிட்டார்.

எம்.பிரபாகரன்

Leave a Reply