இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா காயம் காரணமாக காமன் வெல்த் போட்டியில் பங்கேற்க மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

டோக்கியோ ஒலிம்பிக் தங்கப்பதக்க வெற்றி மன்னன் நீரஜ் சோப்ரா காமன்வெல்த் போட்டிகளில் ஆட பர்மிங்ஹாம் செல்ல மாட்டார். காயம் காரணமாக நீரஜ் சோப்ரா காமன்வெல்த் போட்டிகளிலிருந்து விலகியுள்ளார்.

ஆரிகன் யூஜீனில் நடைபெற்ற உலகட் தடகளப் போட்டிகளில் ஈட்டி எறிதலில் வெள்ளிப்பதக்கம் வென்று அசத்திய நீரஜ் சோப்ரா இந்த நிகழ்வின் போதுதான் அடிவயிற்றுக்கும் மேல் தொடைக்கும் இடைப்பட்ட பகுதியில் காயமடைந்தார். இந்தத் தொடரில் கிரெனடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ் தங்கம் வென்றார்.

இந்நிலையில் காயமடைந்த நீரஜ் சோப்ராவுக்கு ஒருமாத கால ஓய்வு தேவைப்படுவதாக மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

எஸ்.திவ்யா

Leave a Reply