இந்தியா – ஃபிஜி நாடுகளின் வெளியுறவுத் துறை ஆலோசனைக் கூட்டம் சுவாவில் நடைபெற்றது.

இந்தியா – ஃபிஜி நாடுகளின் வெளியுறவுத் துறை ஆலோசனைக் கூட்டம் சுவாவில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் இந்திய தரப்பில் வெளியுறவு அமைச்சக செயலாளர் திரு சவுரவ் குமார், ஃபிஜி தரப்பில் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் திரு யோகேஷ் கரண்  உள்ளிட்டோர் பங்கேற்றனர்.அரசியல், பொருளாதாரம், பாதுகாப்பு, கலாச்சாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் குறித்து இருதரப்பினரும் விவாதித்தனர்.பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்தும் இந்தியா – ஃபிஜி நாடுகளின் வெளியுறவுத் துறை அதிகாரிகள் விவாதித்தனர்.

எம்.பிரபாகரன்

Leave a Reply