காமராஜரின் 120-வது பிறந்தநாள்!- பிரதமர் நரேந்திர மோதி நினைவு கூர்ந்துள்ளார்.

காமராஜரின் பிறந்தநாளையொட்டி அவரை பிரதமர் நரேந்திர மோதி நினைவு கூர்ந்துள்ளார். இந்திய விடுதலைப் போராட்டத்தில் அழியா பங்களிப்பை வழங்கியுள்ள காமராஜர், கருணையுள்ள நிர்வாகியாகவும் திகழ்ந்தவர் என புகழாரம் சூட்டியுள்ளார்.

பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்;

“காமராஜரின் பிறந்தநாளில் அவரை நினைவுகூர்கிறேன். இந்திய விடுதலைப் போராட்டத்தில் அழியா பங்களிப்பை வழங்கியுள்ள காமராஜர், கருணையுள்ள நிர்வாகியாகவும் திகழ்ந்தவர் என புகழாரம் சூட்டியுள்ளார். வறுமையை ஒழிக்கவும், மனிதர்களின் வேதனையை போக்கவும் அரும்பாடுபட்டவர் அவர். சுகாதாரம் மற்றும் கல்வி வசதிகளை மேம்படுத்துவதிலும் அவர் சிறப்பு கவனம் செலுத்தினார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply