ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே-யின் மறைவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் நாளை ஒருநாள் அரசுமுறை துக்கம் அனுசரிக்கப்படுகிறது.

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே, 2022, ஜூலை 8 அன்று மரணமடைந்தார். மறைந்த தலைவருக்கு செலுத்தும் வகையில் இந்தியா முழுவதும் நாளை ஒரு நாள் அரசு முறை துக்கம் அனுசரிப்பதென மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

 இந்தியா முழுவதும் தொடர்ச்சியாக தேசிய கொடி பறக்கும் அனைத்து கட்டிடங்களிலும் துக்கம் அனுசரிக்கும் தினத்தன்று தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும். இந்நாளில் அரசு நிகழ்ச்சிகள் எதுவும் இருக்காது.

எம்.பிரபாகரன்

Leave a Reply