தமிழக-கேரள எல்லையில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம்!-சோதனை சாவடிகளில் போலீஸ் அதிகாரிகள் ஆய்வு.

தமிழக மற்றும் கேரளா எல்லையில் வயநாடு, சுல்தான். பத்தேரி, முத்தங்கா, மைத்திரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் உள்ளது.

இவர்கள் கிராமத்திற்குள் புகுந்து பொதுமக்களை மிரட்டி அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை வாங்கி செல்வதாக கூறப்படுகிறது. மேலும், அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்துவதோடு துண்டு பிரசுரங்களை மவேஸ்டுகள் ஓட்டி வருகிறார்கள்.

இந்நிலையில், தமிழக – கேரளா எல்லையில் பந்தலூர் தாலுகா உள்ளதால் மாவோயிஸ்டுகள் தமிழகத்திற்குள் நுழைந்து விடாமல் இருக்க பாட்டவயல். நம்பியார்குண்னு. பூலக்காடு. கக்குண்டி.தாளூர். கோட்டூர். சோலாடி. நாடுகாணி உள்ளிட்ட பல பகுதிகளில் போலீஸ் சோதனை சாவடிகள் அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பாட்டவயல் அருகே செரியன் காப்பு பகுதியில் ஒரு வீட்டுக்குள் பெண் உள்பட 4 பேர் கொண்ட மர்ம ஆசாமிகள் துப்பாக்கிகளுடன் சென்று உணவு சாப்பிட்டு தங்கிவிட்டு, உணவு பொருட்களையும் வாங்கி சென்றதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து அறிந்த அதிவிரைவு படை போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினார்கள். ஆனால், யாரும் சிக்கவில்லை. அந்த வீட்டில் தங்கி உள்ளவர்கள் மாவோயிஸ்டுகளா? அல்லது வேறு யாராவது வந்து சென்றார்களா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையடுத்து நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் பந்தலூர் அருகே உள்ள சோதனைச் சாவடிகளுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்..

மேலும், மர்ம நபர்கள் நடமாட்டம் உள்ளதா? என்று கண்காணிக்க போலீசாருக்கு அவர் உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது அதிவிரைவு படை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மோகன் நிவாஸ், தேவாலா துணை காவல் கண்காணிப்பாளர் ராமலிங்கம் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

செந்தில்குமார்.

Leave a Reply