“ஆப்ரேஷன் கஞ்சா வேட்டை 2.0” விசாகப்பட்டினத்தில் இருந்து லாரியில் கடத்தி வரப்பட்ட 215 கிலோ கஞ்சா வேடசந்தூர் அருகே பறிமுதல்!

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் போதை பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசார் கஞ்சா சோதனையில் ஈடுபட்ட போது, ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் இருந்து லாரியில் கடத்தி வரப்பட்ட சுமார் 21 லட்சம் மதிப்பிலான 215 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, இது சம்பந்தமாக 2 பேரை இன்று கைது செய்தனர்.

ஆப்ரேஷன் கஞ்சா வேட்டை 2.0 ” என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் கஞ்சா, குட்கா விற்பனை செய்பவர்களை கைது செய்து குண்டர் சட்டத்தில் அடைக்க, தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) சைலேந்திர பாபு உத்தரவிட்டார்.

அதன்பேரில் NIP கண்காணிப்பாளர் ரோகித் அவருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் பகுதியில் போதை பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசார் வாகன சோதனை மேற்கொண்டபோது, ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் இருந்து சுமார் 21 லட்சம் மதிப்பிலான 215 கிலோ கஞ்சா லாரியில் கடத்தி வந்தது தெரியவந்தது.

அதன் பேரில் வேடசந்தூர் அருகே உள்ள காக்கா தோப்பு என்ற இடத்தில் பேப்பர் பண்டல் ஏற்றி வந்த லாரியை மடக்கி பிடித்து சோதனை செய்தனர்.

அச்சோதனையில் லாரியில் கஞ்சா கடத்தி வந்த சங்ககிரியை சேர்ந்த லாரி கிளீனர் அருண்குமார் (வயது 35), பர்கூர் பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவர் சண்முகம் (வயது 58) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து லாரியை பறிமுதல் செய்தனர்.

Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com

Leave a Reply