பட்டாசு வெடி விபத்து!-3 பேர் படுகாயம்!

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் வட்டம், வீரக்கல் கிராமத்தில் சுமார் 10-க்கும் மேற்பட்ட குடிசைத் தொழில் மூலம் பட்டாசு தயாரிக்கும் நிறுவனங்கள் உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் மட்டுமல்லாமல், தேனி மற்றும் மதுரை மாவட்டம் உட்பட அனைத்து பகுதியில் இருந்தும் திருவிழா, திருமணம் மற்றும் சுப, துக்க காரியங்களுக்கு இங்கு வந்துதான் பட்டாசு வாங்கி செல்வது வழக்கம்.

இந்நிலையில் வீரக்கல் கிராமத்தில் திம்மராய பெருமாள் என்பவர், கடந்த 30 வருடங்களாக பட்டாசு தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். இதில் 4 பேர் பணி செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இங்கு ஆறுமுகம், கருப்பையா, சசிகுமார் ஆகியோர் இன்று வேலை செய்து கொண்டிருந்தப்பொழுது திடீரென பட்டாசு வெடிக்க தொடங்கியது. சிறிய அளவில் வெடித்த பட்டாசுகள், சில நிமிடங்களில் பெரிய அளவில் வெடிக்கத் தொடங்கியது.

வெடி சப்தம் கேட்டு அருகில் இருந்த பொதுமக்கள் அனைவரும் அங்கு சென்று பார்த்துள்ளனர்.அப்போது அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தால் உடனடியாக காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்த வெடி விபத்தில் அங்கு பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்ட சசிகுமார், கருப்பையா. ஆறுமுகம் ஆகிய மூன்று பேர் படுகாயம் அடைந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர்களை திண்டுக்கல் தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்நிலையில், திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சீனிவாசன் மருத்துவமனைக்கு நேரில் வந்து விபத்தில் படுகாயம் அடைந்தவரகளுக்கு ஆறுதல் கூறினார்.மேலும், இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பவம் அப்பகுதி முழுவதும் இன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com

Leave a Reply