மேற்குவங்க மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும்!-காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சி சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் குடியரசுத் தலைவர் மற்றும் மேற்கு வங்க மாநில ஆளுநருக்கு கடிதம்!

மேற்குவங்க மாநிலம், ராம்பூர்ஹாட்டில், திருணாமுல் காங்கிரஸ் கட்சியின் பிரமுகர் பாது ஷேக்கின் படுகொலையை அடுத்து, பாது ஷேக்கின் ஆதரவாளர்கள் எதிர் தரப்பினரின் வீடுகளை வெளிப்புறமாக பூட்டி வீடுகளுக்கு தீ வைத்ததில், அந்த வீட்டிற்குள் இருந்த 10 பெண்களும், 2 குழந்தைகளும் உயிருடன் எரிந்து கருதினர்.

இந்நிலையில், மேற்கு வங்க மாநிலத்தில் அரசியல் படுகொலைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், கடந்த மாதத்தில் மட்டும் 26 படுகொலைகள் நடந்து இருக்கும் நிலையில், மார்ச் 21-தேதி இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் மேற்காணும் இந்த துயர சம்பவம் நடந்துள்ளதாகவும், இதனால் மேற்கு வங்க மாநிலத்தில் சட்டம் – ஒழுங்கு சீரழிந்து விட்டதாகவும், எனவே, மேற்கு வங்க மாநிலத்தில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்திய குடியரசு தலைவருக்கும், மேற்கு வங்க மாநில ஆளுநருக்கும் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளனர்.

அந்தப் புகாரின் உண்மை நகல், நமது வாசகர்களின் பார்வைக்காக இங்கு பதிவு செய்துள்ளோம்.

Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com

Leave a Reply