தமிழக சட்டசபை இன்று (12.05.2021) காலை 10:00 மணிக்கு கூடியது. சபை கூடியதும் சபாநாயகராக அப்பாவு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதை, தற்காலிக சபாநாயகர் கு.பிச்சாண்டி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
அதைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி, அவை முன்னவர் அமைச்சர் துரைமுருகன் ஆகியோர் அப்பாவுவை அழைத்து சென்று, சபாநாயகர் இருக்கையில் அமர வைத்தனர்.
அதன்பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி மற்றும் சட்டசபை கட்சி தலைவர்கள் சபாநாயகருக்கு வாழ்த்து தெரிவித்தனர். அதன்பின் துணை சபாநாயகராக கு.பிச்சாண்டிதேர்வு செய்யப்பட்டதாக, சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.
-கே.பி.சுகுமார்.
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com