கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு நிமோனியா காய்ச்சல் கடுமையாக இருக்கிறது!-பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனை வெளியிட்டுள்ள மருத்துவ அறிக்கை.

சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலா, தண்டனை முடிந்து விடுதலையாவதற்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், சசிகலா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தற்போது பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு ‘நிமோனியா’ காய்ச்சல் கடுமையாக இருப்பதாகவும், அவர் அதிதீவிர நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், தைராய்டு குறைபாடு அவருக்கு உள்ளதாகவும், பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

–டாக்டர்.துரைபெஞ்சமின்
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

Leave a Reply