கனமழை பெய்து வருவதால் ஏற்காடு மலைப்பாதையில் தடுப்பு சுவர் சரிந்து கற்கள் சாலையில் விழுந்தன!

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் கடந்த இரு வாரங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏற்காடு பகுதியில் உள்ள பூமி குளிர்ந்து மண் இறுகுத்தன்மை குறைந்துள்ளது. இதனால் இன்று மாலை 4.15 மணியளவில் ஏற்காடு மலைப்பாதையின் 14 ஆவது கொண்டை ஊசி வளைவு பகுதியில் மலைப்பாதை தடுப்பு சுவர் சரிந்தது, கற்கள் சாலையின் நடுவில் விழுந்து கிடந்தன. இதனையடுத்து, நெடுஞ்சாலைத்துறை மற்றும் காவல்துறையினர் அந்த கற்களை அப்புறப்படுத்தினர்.

நே.நவீன் குமார்.

Leave a Reply