கொரோனா வைரஸ் தடுப்பு பாதுகாப்பு கவச உடைகளை, திருச்சி மாநகராட்சி ஆணையரிடம் வழங்கிய மதுரம் மருத்துவமனை நிர்வாகம்!

கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஈடுப்பட்டு வரும் திருச்சி மாநராட்சி மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஆய்வகப் பணியாளர்கள் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து தங்களை முழுமையாக பாதுகாத்து கொள்வதற்காக, அவர்கள் பயன்படுத்தும் வகையில் 200 பாதுகாப்பு கவச உடைகள் மற்றும் கைகளை சுத்தம் செய்வதற்கான திரவம், அதற்கான தானியங்கி கருவி ஆகியவற்றை, திருச்சி மாநராட்சி ஆணையர் சிவ சுப்ரமணியனிடம், திருச்சி மதுரம் மருத்துவமனை நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ”மதுரம் சுகாதார கல்வி மற்றும் சேவா அறக்கட்டளை” சார்பில், மதுரம் மருத்துவமனை நிர்வாக இயக்குநர் டாக்டர் ஐவன் கிறிஸ்டோபர் நேரில் வழங்கினார்.

-துரை திரவியம்.

Leave a Reply