ஊரடங்கு நாட்களில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள்!- மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் உண்மை நகல்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.

15.04.2020 Revised Consolidated Guidelines

 

ஊரடங்கு நாட்களில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள்!

* பேருந்து, ரயில், விமானம் உள்ளிட்ட பொது போக்குவரத்து சேவைகள் அனைத்தும் நிறுத்தப்படும்.

*மே 3 வரை திரையரங்குகள், வணிக வளாகங்கள், அரசியல் நிகழ்வுகள், வழிபாட்டுத்தலங்கள், பொதுக் கூட்டங்களுக்கு தடை தொடரும்.

*அனைத்து கல்வி நிறுவனங்களும் இயங்காது.

*இறுதிச்சடங்கில் பங்கேற்க 20 பேர் வரை மட்டுமே அனுமதி.

*மத நிகழ்வுகளுக்கு தடை; வழிபாட்டு தலங்கள் மூடப்படும்.

*மருத்துவ மற்றும் அத்தியாவசிய தேவைக்களுக்காக செல்பவர்களுக்கு மட்டும் அனுமதி.

*தொற்று அதிமுள்ள பகுதிகள், கட்டுப்படுத்துதல் பகுதியாக மாற்றி சீல் வைக்கப்படும்.

*மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக் கிடையேயான போக்குவரத்துக்கு தடை. மருத்துவ தேவைகளுக்கு மட்டுமே அனுமதிக்கப்படும்.

*தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள உணவகங்கள், மெக்கானிக் கடைகள் இயங்க அனுமதி.

*தனிமைப்படுத்தபட்ட பகுதிகளில் தற்போதைய நிலையே தொடரும்.

*ஏப்ரல் 20-ம் தேதிக்கு பிறகு கட்டுமான பணிகளுக்கு அனுமதி.

*சிறப்பு பொருளாதார மண்டலங்களில் தொழிற்சாலைகளுக்கு அனுமதி.

*சிறு, குறு தொழிலில் ஈடுபடுவோர் பணிகளை தொடரலாம். முக கவசம் அணிந்து தொழிலாளர்கள் சமூக இடைவெளியுடன் பணியாற்ற அனுமதி.

*ஊரக வேலை வாய்ப்பு திட்ட பணியாளர்கள் வேலைக்கு செல்லலாம். ஆனால், முக கவசம் அணிவது கட்டாயம்.

*மளிகைக் கடைகள், காய்கறிக் கடைகள், பழக்கடைகள், பால் நிலையங்கள், இறைச்சிக்கடைகள் செயல்பட அனுமதி.

*விவசாயம், தோட்டக்கலை, பண்ணைத் தொழில், விளைபொருள் கொள்முதலுக்கு அனுமதி.

இவ்வாறு மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

–டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

Leave a Reply