கொரோனா நோய்த் தொற்று!-நட்பு நாடுகளுக்கு  அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா தயாராக உள்ளது!-இந்திய பிரதமர் நரேந்திர மோதி உறுதி.

கொரோனா நோய்த் தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகளில் நட்பு நாடுகளுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா தயாராக உள்ளது என, இந்திய பிரதமர் நரேந்திர மோதி உறுதி அளித்துள்ளார்.

இஸ்ரேலுக்கு குளோரோகுயின் மாத்திரைகளை வழங்க இந்தியா முடிவு செய்திருப்பது குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு நன்றி தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதற்கு அளித்த பதிலில் இந்திய பிரதமர் நரேந்திர மோதி இந்த வாக்குறுதியை அளித்துள்ளார்.

-எஸ்.சதிஸ் சர்மா.

 

One Response

  1. MANIMARAN April 11, 2020 3:48 pm

Leave a Reply